மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். ஒரு காலத்தில் ராவுத்தர் பிலிம்ஸ் மூலம் பல பிரமாண்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர். விஜயகாந்த் என்ற நட்சத்திரம் உருவாவதற்கு ராவுத்தர் ஒரு காரணம். ராவுத்தர் என்ற பெரிய தயாரிப்பாளர் உருவாவதற்கு விஜயகாந்த் காரணம். இப்படி நகமும், சதையுமாக இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தார்கள். அதன் பிறகு தனியாக படம் எடுத்த ராவுத்தர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். ஓட்டல் தொழிலில் இறங்கி அதிலும் பெரும் நஷ்டம். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க புலன் "விசாரணை" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். இதில் பிரசாந்த் ஹீரோ. சுமார் 5 கோடிக்கு மேல் செலவு செய்த எடுக்கப்பட்ட படம். இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் இன்னும் நெருக்கடிக்கு ஆளானார் ராவுத்தர். தியேட்டரில் வெளியிட முடியாத படத்தை சேனலுக்காவது விற்று அதில் வரும் தொகையை கொண்டு ஒரு கடனை அடைக்கலாம் என்று சேனல் சேனலாக அலைந்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் ராவுத்தர் அமைதியானவர், சினிமாவுக்கே உரிய எந்த பழக்க வழக்கமும் இல்லாதவர். கொடுக்கல் வாங்கலில் அத்தனை நேர்மையானவர். அவருக்கே சினிமா கொடுத்திருக்கும் பரிசு மன உளைச்சல்தான். ஒரு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து பல தயாரிப்பாளர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர், பல நட்சத்திரங்களை உருவாக்கியவர், பல டெக்னீஷயன்களை கொண்டு வந்தவர். அவரை திரும்பிப் பார்க்ககூட யாரும் இல்லையென்கிறார்கள்.
இந்த செய்தி வதந்தியாக இருந்தால் சந்தோஷம். உண்மையாக இருந்தால் சினிமா கொஞ்சம் திரும்பி பார்க்கட்டும்.