டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் ராணாவுடன் ஒரேயொரு படத்தில் மட்டும்தான் நடித்துள்ளார் த்ரிஷா. அதற்குள் அவர்களுக்குள் காதல் சிக்குபுக்கு ஓடத் தொடங்கி விட்டது. அதன்பிறகு அவர்கள் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவே இல்லை. இருப்பினும், அடிக்கடி ராணாவை ஐதராபாத் சென்று சந்தித்து காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார் த்ரிஷா. பின்னர், ராணாவின் குடும்ப நிகழ்ச்சிகளிலும் உறவினர் போன்று கலந்து கொண்டு வந்தார் த்ரிஷா. அதேபோல் ராணாவும் அடிக்கடி சென்னைக்கு ரகசிய விசிட் அடித்து த்ரிஷாவுடன் ரியல் டூயட் பாடி வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல், அவர்களின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது. திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றுகூட கூறப்பட்டது. ஆனால் அதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று வழக்கம்போல் கூறினர்.
இந்த நிலையில், தற்போது கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்றொரு தெலுங்கு படத்தில் ராணாவுடன் இணைந்திருக்கிறார் நயன்தாரா. அதிலும் ஓவர் கிளாமர் காட்டியிருப்பதோடு, அதிக நெருக்கம் காட்டியும் நடித்திருக்கிறார். இதனால் ராணாவுக்கு கொண்டாட்டம் என்றபோதும் த்ரிஷாவுக்குத்தான் திண்டாட்டமாகி விட்டது. ராணாவை நேரில் சென்று சந்தித்து, இத்தனை நெருக்கமாக நடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? என்று உரிமையோடு குரல் கொடுத்தவர், குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். அதையடுத்து, இனிமேல் எந்த நடிகையுடனும் ஓவர் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று த்ரிஷாவுக்கு தலையில் அடித்து சத்யம் செய்துள்ளாராம் ராணா. அதன்பிறகுதான் த்ரிஷாவின் கோபம் அடங்கி ஆசுவாசமடைந்துள்ளாராம்.