இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதேபோல்தான் கமல் இயக்கியுளள விஸ்வரூபம் படமும் உருவாகியுள்ளதாம். கதையோட்டம் வெவ்வேறு பாதைகள் என்றாலும் சேருமிடமும், கதையில் மையமும் ஒரே மாதிரியான தீர்வைத்தான பிரதிபலிக்கின்றனவாம். அதிலும், துப்பாக்கி படத்தில் 12 ஸ்லீப்பர்செல்களையும், 12 பேர் சென்று சுட்டு வீழ்த்துவது போன்றொரு காட்சியும் கமல் படத்தில் உள்ளதாம். அதனால் துப்பாக்கிப் படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம் கமல்.
இதனால் தற்போது மொத்த படத்தையும் முடித்து விட்ட அவர், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேற மாதிரியான காட்சிகளை படமாக்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் 12 பேர் வெவ்வேறு இடங்களில் சென்றுதானே ஸ்லீப்பர்செல்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் விஸ்வரூபத்தில் நாம் ஒரே பஸ்சுக்குள் அத்தனை பேரையும சுட்டு வீழ்த்துவது போன்றுதானே படமாக்கியிருக்கிறோம். அதனால் காட்சியமைப்பு வேறு மாதிரியாகத்தானே இருக்கிறது என்று கமலின் டீமைச்சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம். அதனால் முதலில் தடுமாறிய கமல், இப்போது எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.