ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அம்மாவும் - மகனும் சேர்ந்த நடித்த செண்டிமெண்ட் நகை விளம்பரம் ஹிட் அடித்தாலும், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு அந்த தாயை "ஷோக"ப்படுத்தியிருக்கிறதாம். சங்கப் பிரச்சினைகளில் அப்பாபடும் அல்லல்கள் பற்றி மகன் கவலைப்படவே இல்லையாம். குறைந்தபட்சம் தனக்கு ஆதரவாக மகன் குரலாவது கொடுப்பான் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டாராம். அதுமட்டுமல்ல "இந்த ஆளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அவர் குணத்துக்கு நாலுபேரை அனுசரித்தெல்லாம் போக முடியாது. பேசாம வீட்டுல இருக்கச் சொல்லுங்க" என்று அப்பாவுக்கு வேண்டியவர்களிடம் மகன் சொன்னதுதான் இன்னும் வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறதாம். அதோடு "கன்" பட விஷயத்துல கட்டிங் போடுறதுக்காக அப்பா நடத்திய திருவிளையாடல்கள் எல்லாம் புலி தயாரிப்பாளர் மூலம் மகனக்கு தெரிய வர, அப்பா மீது ஏக கடுப்பில் இருக்கிறாராம் மகன். அப்பா செய்த தில்லுமுல்லுக்கு பரிகாரமாக மகனே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவி கன் சுடுவதற்கு ஏற்பாடு செய்தாராம். அம்மாவும் மகனும் மடியில் படுத்துக் கொண்டு பாசத்தை பொழிந்தாலும். அப்பாவும் மகனும் பேசி பல நாள் ஆச்சாம்.