‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்பு கடற்கரையோர கிராமங்களில் நடந்ததால், அந்த கொளுத்தும் வெயிலும், உப்புக்காற்றும் சமந்தாவின் மெல்லியை தோலை பதம் பார்த்துவிட்டன. ஆங்காங்கே அலர்ஜியால் ரத்தம் கட்டிப்போக அலறிவிட்டார் சமந்தா. மருத்துவ பரிசோதனையில், தோல் அலர்ஜி நோய், உடனே சிகிச்சை பெற வேண்டும் என்று கண்டிசனாக சொன்னதால், கடல் மற்றும் ஐ படங்களில் இருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
அதனால் இரண்டு மாதங்களாக தீவிரமான சிகிச்சை எடுத்து விட்டு இப்போது மீண்டும் சினிமா களத்தில் குதித்திருக்கிறார் சமந்தா. ஆனால் இப்போது அவரை சந்தித்து கதை சொல்லச் செல்கிறவர்கள், கதை சொல்வதைவிட அவரது உடம்பை துருவி துருவி பார்க்கிறார்களாம். பார்க்கக்கூடாத இடத்தைப்பார்த்து விட்டு சமந்தாவை நெளிய வைக்கும் அளவுக்கு கேள்வி கேட்கிறார்களாம். இதனால் இப்போது கதை சொல்ல வேண்டும் என்று இயக்குனர்கள் போன் செய்தால், முடிந்தவரை போனிலேயே கேட்கிறேன் என்கிறாராம் சமந்தா. அதோடு, தனது உடம்பில் எந்த பிரச்சினையும் இல்லை. என்ற மருத்துவ சான்றிதழையும் அவர்களுக்கு மெயில் பண்ணி விடுகிறாராம் நடிகை.