தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடல் படத்தில் ஹீரோ கவுதம்மை காட்டிலும், சமந்தாவுக்கு அதிக வயது என்பதால் அப்படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் கடல். இப்படத்தின் நாயகனாக நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கிறார். ஹீரோயினாக ராதாவின் 2வது மகள் துளசி நடிக்கவுள்ளார். முன்னதாக இப்படத்தில் நடிகை சமந்தா தான் நடிக்க ஒப்பந்தமாகி, ஷூட்டிங்கும் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் இருந்து விலகுவதாக சமந்தா கூறினார். ஆனால் விலகலுக்கான காரணம் குறித்து தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சமந்தா விலகலுக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. அதவாது படத்தின் நாயகன் கவுதமை காட்டிலும், சமந்தாவிற்கு அதிக வயதாம். இதனால் தோற்றத்தில் கவுதமை காட்டிலும் சமந்தா ரொம்ப வயதுடையவராக தெரிகிறாராம். மேலும் சமந்தாவை வைத்து சில காட்சிகளை எடுத்த மணிரத்னமும் ஸ்ரீராமும், பின்னர் அவற்றைப் போட்டுப் பார்த்து திருப்தியடையாததாலேயே அவரை நீக்கிவிட்டதாகக் கூறுப்படுகிறது.