'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் சில சமயங்களில் சில நிகழ்வுகள் முரணாக அமையும். விரைவில் ஆறுச்சாமியாக மீண்டும் தன்னுடைய அவதாரத்தை வெளிப்படுத்த இருக்கும் நாயகன் சிசிடிவி பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதை சென்னை காவல் துறைதான் முன்னெடுத்துள்ளது. இது பற்றிய தகவல் வந்ததும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
சில வாரங்களுக்கு முன்பு அந்த நாயகனின் வாரிசு இரவு நேரத்தில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று ஒரு விபத்தை ஏற்படுத்தினார். மீடியாக்களில் அது பற்றிய செய்தி பரபரப்பாக வெளிவந்தது. அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. ஆனால், சிசிடிவி விழிப்புணர்வு விளம்பரத்தில் நாயகன் நடித்ததையும், அவருடைய மகன் விபத்து ஏற்படுத்தியதையும் இணைத்து விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நாயகன் அவருடைய மகனுக்கு அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுக்கட்டும் என்கிறார்கள்.