தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது பச்சை வண்ணத்தை தன் பெயரில் கொண்ட தயாரிப்பு நிறுவனம்.
நட்சத்திரக் குடும்பத்தின் உறவினரான அவர் பெயரில்தான் நட்சத்திரக் குடும்பத்தினர் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தனர். அதன் பின் அவருடைய வேறு சில உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் குடும்பம் அவர்களது வட்டத்திற்குள் வரவைத்தது. இதனால், பச்சை நிறுவனத்தின் தயாரிப்பாளரான அரசரின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. தற்போது அவரை முற்றிலுமாக நட்சத்திரக் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துவிட்டார்களாம். இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குடும்பத்தினர் ஒதுக்கியது போலவே அவருக்கு நெருக்கமான சங்கமும் அவரை ஒதுக்கிவிட்டதாம். அதற்கும் அவருடைய உறவினரான மற்றொரு தயாரிப்பாளர்தான் காரணம் என்கிறார்கள். இருவருக்கும் இடையிலான பதவிப் போட்டிதான் அதற்குப் பிரச்சினையாக அமைந்துள்ளது. இதனிடையே, சங்க உத்தரவை மீறி சில தினங்களுக்கு முன்பு அவர் புதிய படத்தின் விழா ஒன்றை நடத்திவிட்டார். இத்தனைக்கும் எந்த விழாவையும் நடத்தக் கூடாது என சங்கம் சொன்ன போது அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தாராம்.
அதையும் மீறி அவர் விழாவை நடத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களாம். அவர் ஆரம்பித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தள்ளி வைக்கச் சொல்லிவிட்டார்கள். கூடவே இருப்பவர் இப்படி ஒத்துழைக்காமல் போனால் எப்படி என மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் அவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளதாம்.