டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு இயக்குநர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. இரண்டரை மணி நேர படத்துக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் அடியே போதுமானது. அதிகட்பசம் 50 ஆயிரம் அடிக்கு ஷூட் பண்ணிவிட்டு, பிறகு எடிட்டிங்கில் நீளத்தைக் குறைப்பார்கள்.
பிலிம்மேக்கிங் டிஜிட்டல் மயமான பிறகு சகட்டுமேனிக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள். டிஜிட்டல் ஆனதால் பிலிம் செலவு இல்லை என்றாலும் தினசரி படப்பிடிப்பு செலவு எகிறுவதை இயக்குநர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.
சிவமான நடிகர் நடிக்கும் படத்தில் இந்த பஞ்சாயத்து ஏற்பட இயக்குநருக்கும், எடிட்டருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்போது அப்படியொரு பஞ்சாயத்து இன்னொரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
நட்சத்திரத்தை பின்னணியாக கொண்டு படம் இயக்கும் அந்த இயக்குநர், எடுத்த காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை வீணாக்காமல் இரண்டு பாகங்களாக வெளியிட எண்ணி, சம்பந்தப்பட்ட ஹீரோவிடம் பேசினாராம். அவரும் சம்மதம் சொல்ல, எக்ஸ்ட்ரா பேமண்ட் மட்டும் கேட்டாராம், இதனால் ஷாக்காகி போய் உள்ளார் இயக்குநர்.