இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு இயக்குநர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. இரண்டரை மணி நேர படத்துக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் அடியே போதுமானது. அதிகட்பசம் 50 ஆயிரம் அடிக்கு ஷூட் பண்ணிவிட்டு, பிறகு எடிட்டிங்கில் நீளத்தைக் குறைப்பார்கள்.
பிலிம்மேக்கிங் டிஜிட்டல் மயமான பிறகு சகட்டுமேனிக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள். டிஜிட்டல் ஆனதால் பிலிம் செலவு இல்லை என்றாலும் தினசரி படப்பிடிப்பு செலவு எகிறுவதை இயக்குநர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.
சிவமான நடிகர் நடிக்கும் படத்தில் இந்த பஞ்சாயத்து ஏற்பட இயக்குநருக்கும், எடிட்டருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்போது அப்படியொரு பஞ்சாயத்து இன்னொரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
நட்சத்திரத்தை பின்னணியாக கொண்டு படம் இயக்கும் அந்த இயக்குநர், எடுத்த காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை வீணாக்காமல் இரண்டு பாகங்களாக வெளியிட எண்ணி, சம்பந்தப்பட்ட ஹீரோவிடம் பேசினாராம். அவரும் சம்மதம் சொல்ல, எக்ஸ்ட்ரா பேமண்ட் மட்டும் கேட்டாராம், இதனால் ஷாக்காகி போய் உள்ளார் இயக்குநர்.