தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1500 கோடியைத் தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட வினியோகஸ்தருக்கே இதுவரை சில கோடிகள்தான் கையில் கிடைத்துள்ளதாம். படத்தின் வசூல் ரூ.2000 கோடியை நோக்கி போய் கொண்டிருக்கும் வகையில் அவர்களே சக்சஸ் மீட் கூட வைக்கவில்லை. ஆனால் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு வந்த இரண்டு படங்களுக்கு இந்த வாரத்தில் நடைபெற்ற 'சக்சஸ் மீட்'டால் ஆடிப் போனவர்கள் நிறைய பேர்.
எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள் நாங்கள் தாங்குவோம் என்ற ரீதியில்தான் அந்தப் படங்களை விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இரண்டு படங்களுமே தரத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் மோசமான படங்கள். சுமார் 5 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட அந்தப் படங்கள் 50 லட்சம் கூட வசூலித்திருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், எதற்காக அவர்கள் 'சக்சஸ் மீட்' என்று நடத்தினார்கள் எனத் தெரியவில்லை என திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த இந்த சக்சஸ் மீட் கலாச்சாரம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.