டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. பாகுபலி 2 க்கு ரசிகர்கள் இடையே கிடைத்துள்ள வரவேற்பால் நடிகர் ராணா டங்குபதி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகுபலி என்னை சினிமா வாழ்க்கையையே மாற்றிய படம். பாகுபலி 2 ம் பாகத்தால் நிச்சயமாக எனது மார்க்கெட் வால்யு உயர்ந்துள்ளது. இப்போது ஏராளமான பட வாய்ப்புக்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளேன்.
வேறு வேறு மொழிகளில் மாறுபட்ட கதைகளை கேட்டு வருகிறேன். பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு முன் இது போன்ற பட வாய்ப்புக்கள் கிடைப்பது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ரசிகர்களுக்கும் இப்போது என் மீது நம்பிக்கை வந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான பட நிறுவனங்களும், இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.