சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'பாகுபலி-2' நேற்று உலகெங்கிலும் ரிலீஸானது.. கேரளாவிலும் இந்தப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். கிட்டத்தட்ட 300 தியேட்டர்களுக்கு மேல் கேரளாவில் வெளியானாலும் கொச்சியில் உள்ள பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் மட்டும் நேற்று காலையில் படம் திரையிடப்படவில்லை.. ஏற்கனவே காலை, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லாத நிலையில், முற்பகல் முதல் காட்சியும் ஆரம்பிக்கப்படாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
நேரம் செல்லசெல்லத்தான் விநியோகஸ்தர்களுக்கும் பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்துக்குமான பங்கு தொகை உடன்பாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக 'பாகுபலி-2' திரையிடுவதில் சிக்கல் எழுந்திருப்பது தெரியவந்தது.. ரசிகர்களின் ரகளை அதிகமானதை தொடர்ந்து படத்தை கேரளாவில் வெளியிட்ட குளோபல் மீடியா நிறுவனமும் தியேட்டர் நிர்வாகமும் இணைந்து பேசி சுமூகமான உடன்பாட்டிற்கு வந்தன. இதை தொடர்ந்து பி.வி.ஆர் சினிமாஸில் பாகுபலி-2' மாலை முதல் காட்சிகள் தொடங்கின.