இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகில் சில வாரங்களுக்கு முன்பு டிவிட்டரில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்தப் பின்னணிப் பாடகி. சில நடிகர்களும், நடிகைகளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவருடைய டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது, ரசிகர்களும் அடுத்து என்னென்ன புகைப்படங்கள் வெளியாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக சிலரது முயற்சியால் அந்த பாடகியை நாட்டை விட்டே அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்தாலும் அந்தப் பாடகி வெளியிட்ட புகைப்படங்களில் தன்னுடைய புகைப்படமும் இருந்தது குறித்து அந்த மூணுஷா நடிகை கடும் கோபமடைந்தார். அந்தப் பாடகி பற்றி வெளிப்படையாகவும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதனிடையே நடிகருடன், மூணுஷா நடிகை நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன் தோழிகள்தான் வெளியில் விட்டிருப்பார்கள் என எரிச்சலில் இருக்கிறாராம். அதனால் சமீப காலமாக பார்ட்டிகளுக்கும், வெளியில் போனாலும் தன்னுடைய தோழிகளை கூட சேர்த்துக் கொள்வதில்லையாம். எங்கே தனக்குத் தெரியாமல் புகைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்ற பாதுகாப்பும், பயமும்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.