இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அரசியல் ஆசையில் அலைந்து திரிந்த பேய் நடன குரு நடிகருக்கு பித்து பிடிக்காத குறையாம்! அதாகப்பட்டது ., தன்லைப்புக்கு லைன் காட்டிய உச்ச நட்சத்திரம் பாணியில் ராகவேந்திராய நமக ., என கோயில் எல்லாம் கட்டிய ., அந்த நடன குரு நடிகருக்கு தமிழக "மல்லு கட்டு விவகாரத்திற்கு அப்புறம் மெல்ல, மெல்ல பொலிட்டிக்கல் ஆசை, புயலாகத் தோன்றியதாம். இதை, இலை மறைகாயாக "வருவேன், வருவேன்... என வராமல் போன குருநாதர் பாணியில், வர மாட்டேன், வர மாட்டேன்... ஒரு வேளை தேவைபட்டால்..." என பிரஸ் மீட்டெல்லாம் வைத்து, வந்துவிட துடித்த நடன குருவிற்கு, "ஆப்(பு)" பாக அமைந்திருக்கிறது, ஆளும், கழகம் இரண்டு, மூன்று துண்டாய், உடைந்தததும், செயல் தலைவரின் இன்றைய செயல்பாடுகளும், "மல்லு கட்டு" போராளிகள், எங்களுக்கும் எங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும், அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை... என அறிக்கைவிட்ட அதிரடியும், நடிகர் நடன குருவை ரொம்பவே திக்கு முக்காடி போக விட்டிருக்கிறதாம்.
அதனால் தனது அரசியல் பிரவேசத்தை மீத்தேன், ஈத்தேன், கார்பன் திட்டங்களுக்கு எதிரான போரட்டங்களுக்குப் பின் காட்டிக் கொள்ளலாம் என பித்துப் பிடிக்காத குறையாக காத்திருக்கிறாராம் மனிதர் பாவம். "ஆமா, தவிர்க்க இயலாத சூழலால் தள்ளி தள்ளி போகும். உங்க "மொட்ட கெட்ட" வருமா ?வராதா...? அதை முதலில் சொல்லுங்கள் நடன குருவே.?!