டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளானதை கண்டித்து மலையாள திரையுலகமே ஒன்று திரண்டு கூட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்தது. அதில் பேசிய அனைவரும் நடிகைகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவேண்டும் என்கிற விதமாக பேசினார்.. ஒரு சிலர், நடிகைகள் தனியாக டாக்சியில் செல்லாமல் தக்க துணையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தி பேசினார்கள்.. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை ஒருமித்த கருத்தாக வெளிபடுத்தினார்கள்...
ஆனால் இந்த கண்டனக்கூட்டம் பற்றி லவ் 24x7 என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீபாலா மேனன் என்பவர் வேறு கோணத்தில் தனது கருத்தை கிண்டலாக கூறியுள்ளார். அதாவது பெண்கள் அப்படியிருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்.. ஆனால் ஆண்கள் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் கூட வலியுறுத்த மாட்டீர்கள்.. அப்படித்தானே..?” என கொஞ்சம் கோபமாகவே கேட்டுள்ளார்.. தற்போது தமிழில் பிரபலமாக நடித்துவரும் நிகிலா விமலை இவர்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.