அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதற்கான ஸ்டெப்பை மோகன்லாலே எடுத்துள்ளார். காரணம் ஜோஷி போன்ற இயக்குனர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதுதான் மோகன்லாலின் எண்ணம்.
கடந்த சில வருடங்களாக எதுவும் பெரிய ஹிட் கொடுக்காததால், அடுத்து தாங்கள் இருவரும் இணையும் படம் இழந்த பார்மை மீட்டுத்தரவேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜோஷி ஸ்கிரிப்ட்டை தயார்செய்து வருகிறாராம். அதற்காகவே தனது வழக்கமான கதாசிரியர்களை விட்டுவிட்டு, 'புலி முருகன்' சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் ஜோஷி. மோகன்லால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் விரைவில் இந்தப்படம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.