தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இல்லற வாழ்வில் கசப்பான அனுபவத்தை சந்தித்த அந்த விஜயமான இயக்குநர், அடுத்தப்படியாக ஜெயமான நடிகரை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். கதையைக் கேட்டு ஓகே சொன்னதோடு, இவ்வளவு கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டிருக்கிறார் நடிகர். பாதி கருப்பிலும் மீதி கணக்கிலும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டதாம். அதன் பிறகுதான் 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர், மொத்த சம்பளத்தையும் செக் அல்லது டிடியாக கேட்கிறாராம். அதோடு வரி தொகையையும் நீங்களே செலுத்த வேண்டும் என்று இயக்குநரிடம் நிபந்தனை போட்டிருக்கிறார். ஏற்கனவே பேசிய சம்பளத்தை கொடுக்கவே தயாரிப்பாளர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போது கூடுதலாக வரியையும் கட்ட சொல்வதால் தயாரிப்பாளர் கடுப்பில் இருக்கிறாராம்.