அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. ஆனால் ஒரு சிலருக்குத்தான் இது பொறுக்காதே.. கோலம் பகுதியை சேர்ந்த ஒருவர் உடனே மனித உரிமை கழகத்திற்கு புகாரை தட்டிவிட்டார்.
அதில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அதிக காட்சிகளை திரையிட்டு வருவதாகவும், இதற்காக வழக்கமான காட்சி நேரங்களை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு சிரமம் தருவதாகவும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதகாவும் அந்த புகாரில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே ஜெட் வேகத்தில் செயல்பட்ட மனித உரிமை கழகம் இந்த புகாரை அப்படியே கேரள அரசுக்கு அனுப்பி வைத்து இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கேரளா அரசு இது குறித்து கொல்லம் முனிசிபாலிட்டி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது