ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஜெயராம் தற்போது சி.பி.எல் எனப்படும் செலிபிரட்டி பேட்மிண்ட்டன் லீக் போட்டிகளில் பிஸியாக இருக்கிறார். பின்னே..? கேரளா ராயல்ஸ்' சி.பி.எல் டீமின் கேப்டன் அவர்தானே.. இந்த அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடைபெற்றது.. இந்த விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் மாதவன், குஞ்சாக்கோ போபன், நரேன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.. இந்த விழாவுக்கு மம்முட்டியை ஜெயராம் வரவழைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை..
சமீபத்தில் நடைபெற்ற மம்முட்டியின் 'தோப்பில் ஜோப்பன்' இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஜெயராம். அந்த விழாவில் பேசும்போது தனது மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் படிக்க சீட் வாங்கிய அனுபவத்தை உருக்கமாக சொன்னார். அதில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, மேடையில் அனைவரின் முன்னிலையிலும் அதன் தாளாளரிடம் தனது மகனுக்கு சீட் தரவேண்டும் என கேட்டு அவரிடம் சத்தியம் வாங்கிய கதையை கூறினார்..
'தோப்பில் ஜோப்பன்'இசைவெளியீட்டு விழாவுக்கும், ஜெயராம் தனது மகனுக்கு சீட் வாங்கியதற்கும் என்ன சம்பந்தம் என மம்முட்டி உட்பட வந்திருந்த ஆடியன்ஸ் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள்.. ஆனால் ஜெயராம் எவ்வளவு புத்திசாலி என்பது அதன்பின்னர்தானே தெரிந்தது.. அதாவது அப்படி மேடையில் அனைவர் முன்னிலையிலும் சத்தியமோ, வாக்கோ கொடுக்கப்பட்டு விட்டால் அதை மீற முடியாதலவ்வா, அதேபோல இந்த விழா மேடையிலும் டக்கென மம்முட்டியின் கைகளை பிடித்துக்கொண்ட ஜெயராம், நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தனது கேரளா ராயல்ஸ் அணியின் அறிமுக விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என ஒரு கோரிக்கையை வைத்தும் விட்டார்.
தர்மசங்கடம் தான் என்றாலும், பொதுமேடை என்பதாலும், தனது விழாவுக்கு ஜெயராம் வந்திருந்ததாலும் மறுப்பாக பதில் சொல்லமுடியாத மம்முட்டி, ஜெயராமின் ட்ரிக்கை பாராட்டியபடி, தான் அவரது விழாவுக்கு வருவதாக வாக்களித்தார. சொன்னபடி இரண்டு நாள் கழித்து நடைபெற்ற அந்த விழாவிலும் கலந்துகொண்டு ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் மம்முட்டி.