தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒருசில நடிகைகளுக்கே தான் கதாநாயகியாக நடித்த முதல் படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச்சாகும் பாக்கியம் கிடைக்கும்.. அந்தவகையில் வினீத் சீனிவாசன் தங்கையாக ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்கிற படத்தில் நடித்தாலும் அதில் கவனிக்கப்படாமல் போன அபர்ணா பாலமுரளி, மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலின் கதாநாயகியாக நடித்து ஒரே படத்தில் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.. ஒப்பம் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த மோகன்லால், அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்து வாழ்த்தியதோடு, அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு ஸ்டார்கள் மனதிலும் இடம்பிடித்து விட்டார்..
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு முத்தச்சி கதா படத்திலும் இவரது நடிப்பு பாரட்டப்பட்டு வருகிறது. அபர்ணா பாலமுரளி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, அதாவது பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நடிகர் விக்ரமின் தீவிர ரசிகை.. ஆனால் தான் நடிகையாவேன் என்று நம்பியதை விட, என்றாவது ஒருநாள் விக்ரமை சந்திப்பேன் என்று உறுதியாக நம்பினாராம். அந்த வாய்ப்பும் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபர்ணாவுக்கு கிடைத்து விட்டது.. அந்த விழாவில் கலந்துகொள்ள விக்ரம், குஷ்பூ ஆகியோர் வந்திருந்தனர்..
அப்போது குஷ்புவிடம் பேசிய அபர்ணா, தான் விக்ரமின் தீவிர ரசிகை என்றும், அவரது எந்த புகைப்படத்தை தன்னிடம் காட்டினாலும் அது எந்தப்படத்தில் எந்த காட்சியில் அவர் நடித்தது என தன்னால் உடனே சொல்ல முடியும் என கூற குஷ்பூவுக்கு ஆச்சர்யம்.. இந்த தகவலை அவர் விக்ரமிடம் சொல்ல, அவரும் அபர்ணாவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம்.. அந்தவிதமாக விக்ரமை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட அபர்ணா பாலமுரளியின் அடுத்த இலக்கு விக்ரமுடன் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடித்துவிடவேண்டும் என்பதுதானாம்.