டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'ஃபக்ரி' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக 'பிசாசு' நாயகி பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா, தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் வெளியானது. அடுத்ததாக 'ஒரேமுகம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுவரை சின்னச்சின்ன படங்களில் நடித்துவந்த பிரயாகாவுக்கு சித்திக்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தான் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாகி விடுவோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் பிரயாகா..