பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உச்ச நடிகர் உலக அளவில் பிரபலம். உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொடுக்கும் சந்தோஷத்தை அவரது குடும்பம் அவருக்கு தருவதில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது அவர் உச்சகட்ட கவலையில் இருக்கிறார் என்பதுதான் உண்மை. அவரது சவுந்தர்யமான இரண்டாவது மகளுக்கும், மருமகனுக்கும் சில மாதங்களாகவே மனஸ்தாபம். தன் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக கணவன் மீது மனைவிக்கு கோபம், தன் பேச்சை கேட்பதில்லை என்ற மனைவி மீது கணவருக்கு கோபம். இந்த ஈகோ பிரச்சினையால் கடந்த சில மாதங்களாகவே இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்களாம்.
எப்படியாவது சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து விடலாம் என்று உச்ச நடிகர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதாம். இருவரும் இப்போது சட்டப்படி பிரிந்து விட முடிவு செய்து விட்டார்களாம். இருவருமே விரைவில் கோர்ட் படியேற இருக்கிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மனைவி அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறாரே என்ற வேதனையில் இருப்பவருக்கு இப்போது மகள் பிரச்சினையும் சேர்ந்து கொண்டிருப்பதால் கவலையின் உச்சத்தில் இருக்கிறாராம். எல்லா பிரச்சினையும் நல்லபடியாக முடிந்து உச்சநடிகர் நெருப்பு மாதிரி எழுந்து வரவேண்டும் என்பதே அவரது கோடான கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.