'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் 'பேபி'. இந்திய உளவாளிகளை மையப்படுத்தி இதுநாள்வரை உருவாகியிருந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பலராலும் பாராட்டப்பட்டது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதன் முதல் பாகத்தில் நடித்திருந்த ராணா டகுபதி இந்த ப்ரீக்வலில் இடம்பெறவில்லையாம். அதே சமயம் முதல்பாகத்தில் இடம் பெற்ற டாப்சி இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுகிறாராம். புதிய அம்சமாக இந்த இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து பிருத்விராஜ் பாலிவுட்டில் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். அதுமட்டுமல்ல இந்த இரண்டாம் பாகத்தை நீரஜ் பாண்டே தயாரிப்பதோடு நின்றுகொள்ள, வேறு ஒருவர் படத்தை இயக்கவுள்ளாராம்.