திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பொதுவாக மலையாள சினிமாக்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓடுவது என்பது அரிதாகவே நடக்கிற விஷயம்.. ஏதோ அத்திப்பூத்தாற்போல ஒன்றிரண்டு படங்கள், அதுவும் ஏதாவது தெலுங்கு நடிகர்கள் அந்தப்படத்தில் இருந்தால் மட்டுமே டப்பிங் செய்யப்படும் வாய்ப்பை பெறும். ஆனால் மணிரத்னம் இயக்கிய தமிழ்ப்படமான 'ஒ காதல் கண்மணி' தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸானதன் மூலமாக மலையாள நடிகரான துல்கருக்கு தெலுங்கில் கால் பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம்.. அந்தப்படத்தால் அவருக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இதனை பயன்படுத்தி துல்கர் சல்மான் நடித்து அதே வருடம் மார்ச்சில் மலையாளத்தில் வெளியான '100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தார்கள்.. துல்கரை வைத்து மட்டுமே தெலுங்கில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடமுடியுமா..? ஒகே கண்மணியை போல இந்தப்படத்தின் கதாநாயகியும் தெலுங்கில் பாப்புலரான நித்யா மேனன் என்பதால் தான் டப்பிங் ரிலீசில் ஆர்வம் காட்டினார்கள்.. ஆனால் சில பல காரணங்களால் இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்து, ஒரு வழியாக இன்று ஆந்திராவில் ரிலீசாகியும் விட்டது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மானும் நித்யா மேனனும் கலந்துகொண்டனர்.