ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் நடித்த நாயகன் பிரபாஸ் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்திற்காக மட்டும் உழைத்து வருகின்றார். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கும் நிலையில் நாயகன் பிரபாஸ் டிசம்பரில் தனது அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இயக்குனர் சுஜீத் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கின்றார். பாகுபலி -2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்ற பின்னர், பிரபாஸ் டிசம்பரில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவக்கியுள்ள சுஜீத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம்.