'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்ட்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை(ஜூலை 29) முதல் துவங்குகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மகேஷ் பாபு படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை பாடலுடன் துவங்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதாம். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன. மேலும் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொதுவான தலைப்பையே படத்திற்கு வைக்க இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் முடிவு செய்துள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 8ல் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.