ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகருமான ராம் சரண், தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். தெலுங்கில் துருவா என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். துருவா படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ராம் சரண், கபாலி படம் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று திரைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் வசூலை அள்ளி வருகின்றது.
திரை உலகில் உச்சக்கட்ட கொண்டாட்டமாக பார்க்கப்பட்ட கபாலி திரைப்பட வெளியீட்டிற்கு நடிகர் ராம் சரணும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டிருக்கும் ராம் சரண் கபாலி படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டோலிவுட்டின் பிரம்மாண்ட வெற்றியாக அறியப்பட்ட பாகுபலி படத்தின் முதல் நாள் வசூலை கபாலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவறவிட்டுவிட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார். மேலும் விரைவில் கபாலியை தரிசிக்கவுள்ளதாகவும் ராஜமௌலி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,