'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நேற்றைய தினம் மலையாள நடிகர் சங்கம் (AMMA) தனது பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. நடிகர்சங்கத்தலைவரும் நடிகரும் எம்.பியுமான இன்னொசன்ட் தலைமையில் கூடிய இந்தக்கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். ஆனால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களான தேசியவிருது பெற்ற நடிகர் சலீம் குமார் மற்றும் சமீபத்தில் பத்தனாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெகதீஷ் ஆகிய இருவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்..
நடிகரும் எம்.எல்.ஏவுமான கணேஷ்குமாரை (படத்தில் மோகன்லாலின் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்) ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த மோகன்லாலின் செயலை கண்டித்து நடிகர்சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார் சலீம்குமார். அதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகர் ஜெகதீஷுக்கும் கிட்டத்தட்ட இதே காரணம் தான்.. மோகன்லால் தனது நண்பர் தான் என்றாலும், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட கணேஷ்குமாருக்கு ஆதரவாக மோகன்லால் பிரச்சாரம் செய்ததால் மன வருத்தத்தில் இருந்ததாலும், தனக்கு ஆதரவாக பேசிய சலீம்குமாரே ராஜினமா செய்துவிட்டதாலும் தான் மட்டும் எதற்காக நடிகர்சங்க கூட்டத்திற்கு போகவேண்டும் என வருகை தராமல் இருந்துவிட்டதகவும் சொல்லப்படுகிறது.