ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தான் ஒரு ஏர் கோஸ்டஸாக விரும்பியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாக மாறி தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ரோஜா பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணன் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.