ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள நடிகரும் முன்னாள் தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவருமான முகேஷை காணவில்லை என கேரளாவில் கொல்லம் தொகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்துவரும் முகேஷுக்கு எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் நிறைவேறியது.. கொல்லம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் முகேஷ்.
ஆனால் கொல்லம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் நேற்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு சென்று, எங்களது எம்.எல்.ஏ முகேஷை அவர் வெற்றிபெற்ற பின்னர் எங்கள் தொகுதிப்பக்கமே பார்க்கமுடியவில்லை.. கடைசியாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது பார்த்ததுதான். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என மேன் மிஸ்ஸிங் புகார் கொடுத்துள்ளார்களாம். தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.. அதற்குள்ளாகவே எதிராளிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் முகேஷ்.