ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகரின் குடும்பத்தினர் திரையுலகில் தங்களது குடும்பத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில வருடங்களாகவே சில வேலைகளைப் பார்த்து வருவதாக மூத்த திரையுலகினர் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல் பின்னணியில் இந்தக் குடும்பத்தினரின் செயல்பாடு அதிகம் என்கிறார்கள். அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மீதும் கண் வைத்திருக்கிறார்களாம்.
இதனிடையே, சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான தியாகராய நகரில் மார்க்கண்டேய நடிகரின் மூத்த நடிகரான பகலில் ஒளி தரும் பெயரைக் கொண்ட நடிகர் கட்டியுள்ள பிரம்மாண்டமான பங்களாவின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளதாம். இரண்டு தெருக்களை இணைக்கும் அளவிற்கு சுமார் எட்டு கிரவுண்டு இடத்தில் மூன்று கிரவுண்டுக்கும் மேல் கட்டப்பட்ட மூன்று அடுக்கு மாடி கொண்ட அதி நவீன வசதி கொண்ட பிரம்மாண்டமான பங்களா ஒன்றை அவர் கட்டியிருக்கிறார். கிரவுண்டுகளில் மதிப்பு மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் என்கிறார்கள். அதில் கட்டியுள்ள வீட்டின் பட்ஜெட் மட்டும் சுமார் 50 கோடியாம்.
தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் கூட அந்த அளவிற்கு ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒளி' நடிகர் மாளிகை கட்டியுள்ள அந்த இடத்தைப் பற்றிக் கூட சில பிரச்சனைகள் வந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டதாம். இவ்வளவு பெரிய மாளிகையின் புதுமனை புகு விழாவிற்கு திரையுலகத்திலிருந்து யாரையும் அழைக்காமல் குடும்பத்தினர் பங்கு பெறும் நிகழ்ச்சியாக மட்டும் நடத்த உள்ளார்களாம்.
ஏற்கெனவே, இந்தக் குடும்பத்தினர் மீது பலரின் 'கண்' திருஷ்டி இருக்க மாளிகையின் மீதும் அனைவரது கண்ணும் படக் கூடாது என்பதே அதற்குக் காரணமாம்.