பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய அளவிலான கார்ட்டூன் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கார்ட்டூன் அகாடமி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் சில தினங்களுக்கு முன் அதாவது தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் மோகன்லால். அங்கே இருந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்ட மோகன்லால், ஸ்மைலிஸ் குறியீடுகள் வரையப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அப்போது கார்டூனிஸ்ட்டுகளை வாழ்த்தி பேசிய மோகன்லால், “ஓராயிரம் வார்த்தைகள் சேர்ந்து சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கார்ட்டூன் சொல்லிவிடும்.. அவ்வளவு ஏன் ஒரு செய்தித்தாள் வாசித்த உணர்வை ஒரு கார்ட்டூனே தந்துவிடும். நம் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.சங்கர் என்பவரின் கார்ட்டூன்களில் தனது படம் இடம்பிடிப்பதை பெருமையாக நினைத்தார்” என கார்ட்டூனிஸ்ட்டுகளை பாராட்டியதோடு கார்ட்டூனிஸ்ட்டுகளால் தான் அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.