டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இதுநாள் வரை ரசிகர்கள் ஸ்டைலிஷாக பார்த்து பழகிய துல்கர் சல்மான் படம் முழுவதும் வேட்டி அணிந்தபடி வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் லுக் கொடுக்க உள்ளார். இதற்கு முன் 'ஞான்' மற்றும் சார்லி' ஆகிய படங்களில் வேட்டி கட்டி அவர் நடித்திருந்தாலும் இதில் கிராமத்தில் உள்ள படித்த இளைஞனாக வருவதால் படம் முழுவதும் வேட்டி தான் அணிகிறாராம் துல்கர்.. தற்போது அமல் நீரைத் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் இந்த கெட்டப்பில் வலம் வர இருக்கிறார் துல்கர். மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தான் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.
ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத். அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது..