'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா கடந்த ஜனவரி மாதம் 'தோழா' படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்ற இடத்தில் திடீரென மரணம் அடைந்தார்.. கல்பனாவின் ஒரே மகள் ஸ்ரீமயி.. கல்பனா தனது கணவருடன் விவாகரத்து பெற்றபின்னர் தனது மகளுடன் தனது தாயார் வீட்டில் தான் வசித்து வந்தார். தற்போது பிளஸ் ஒன் படிக்கும் ஸ்ரீமயிக்கு பாட்டியும் அவரது சித்தி ஊர்வசியும் பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் கிளம்பியது..
மேலும் தனது சித்தி ஊர்வசியிடமும் தனது நடிப்பாசையை இவர் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'உன்னோடு கா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தனது சித்தி ஊர்வசியுடன் கலந்துகொண்டார் ஸ்ரீமயி. அதனால் தான் இப்படி ஒரு தகவல் வெளியே பரவியதாம். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றின்போது இதை கடுமையாக மறுத்திருக்கிறார் ஸ்ரீமயி. தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், படிப்பு மட்டுமே தனது இப்போதைய குறிக்கோள் என்றும் கூறியுள்ள ஸ்ரீமயி, பின்னாளில் ஒருவேளை தான் நடிகையானாலும் ஆகலாம் என்றாலும், தனது அம்மாபோல நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்கமுடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறியிருக்கிறார்.