சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
சினிமா பிரபலங்களில் சிலர் தங்களுக்குள் மனமொத்து வாழ முடியாமல் விவாகரத்து பெறுவது வாடிக்கையான நிகழ்வுதான். அதன்பின் அவர்களில் சிலர் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இன்னொரு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் உண்டு. ஆனால் மலையாள நட்சத்திர தம்பதிகளாக இருந்து இப்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நடிகர் திலீப்பும் மஞ்சு வாரியரும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசப்படவே செய்கின்றனர். இவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மறு திருமணத்திற்கு முயற்சி செய்யவில்லை. அப்படி செய்வதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையாம்.
அதேபோல ஒருவர் மற்றவரை தாக்கி எங்கும் பேசுவதும் இல்லை.. பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை கூட முன்கூட்டியே அறிந்து தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மறைந்த நடிகர் ரத்தீஷின் மகள் பத்மாவின் திருமணத்தில் இருவருமே கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.. காரணம் மணப்பெண் பத்மா இவர்கள் இருவரையும் தனது சகோதர, சகோதரி ஸ்தானத்தில் வைத்து அன்பு செலுத்துபவர். அதனால் திருமண நிகழ்வின்போது இருவரும் அருகருகே நெருங்கி வந்து மணமக்களை வாழ்த்திய தருணத்திலும் கூட ஒருவரை ஒருவர் பார்க்காததுபோல நாசூக்காக விலகிவிட்டார்கள்.. திருமணத்திற்கு வந்திருந்த பலரும் இவர்கள் இருவரும் ஏதாவது பேசுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தார்களாம்.