'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
மலையாள ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த சுரேஷ்கோபி, நேற்று ராஜ்யசபா எம்.பி.யாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். கேரளா மக்களிடையேயும் நடிகர்களிடையேயும் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சூப்பர் ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் மீது அரசியல் சாயம் படாமல் சற்று ஒதுங்கியே நடக்க, ஆக்சன் ஹீரோ சுரேஷ் கோபியோ அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வது, சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்வது என அரசியலில் எந்நேரமும் இறங்க தயார் நிலையிலயே கடந்த சில வருடங்களாக தன்னை அடையாளப்படுத்தி வந்தார். அதற்காக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்தியும் வந்தார்.
அவ்வளவு ஏன் கடந்த முறை பார்லிமென்ட் தேர்தலின் போது கூட பிரதமர் மோடியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர் பிஜேபியில் சேரப்போகிறார் என்று பலர் சொல்ல ஆரம்பிக்க, அப்போதைக்கு அதை மறுத்து வந்தார் சுரேஷ்கோபி. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர் பா.ஜ.கவில் முக்கிய பொறுப்புக்கு வரப்போகிறார் என்பது மட்டும் உறுதியானது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ராஜ்சபா எம்பி பொறுப்பை கொடுத்தது பா.ஜ., அரசு. அதன்படி நேற்று ராஜ்யசபா எம்பியாக சுரேஷ்கோபிக்கு பதவி எடுத்து கொண்டார். ராஜ்யசபா சேர்மன் ஹமீத் அன்சாரி முன் ராஜ்யசபா எம்பியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் சுரேஷ்கோபி.
அதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்த சுரேஷ்கோபி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றதோடு, அவரை தங்களது மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு வருகை தருமாறும் வேண்டுகோள் வைத்தார். கேரளாவில் பா.ஜ.கவை வலுவாக காலூன்ற வைக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகத்தான் சுரேஷ்கோபியை எம்.பி ஆக்கியுள்ளார் பிரதமர் மோடி. ராஜ்யசபா எம்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்கோபிக்கு மோகன்லால், மம்முட்டி உட்பட சக மலையாள நடிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.