இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அங்காடி தெரு படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் பல பிரச்சனைகளில் சிக்கி, மீண்டு வந்துள்ளார். அஞ்சலி தற்போது கை நிறைய படங்களுடன் நடித்து வருகின்றார். அஞ்சலி விமலுடன் இணைந்து நடித்துள்ள மாப்ள சிங்கம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் போன்ற படங்களில் அஞ்சலி நடித்து வருகின்றார். தெலுங்கில் சித்ரங்கதா என்ற திகில் படத்திலும் அஞ்சலி நடிக்கின்றார். இப்படம் தமிழில் யார் நீ என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இயக்குனர் அஷோக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அஞ்சலி பாடல் ஒன்றும் பாடியுள்ளாராம். பாடகர் செல்வ ஸ்வாமிநாதனுடன் இணைந்து அஞ்சலி அப்பாடலைப் பாடியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.