பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் ஜோதிகாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக '36 வயதினிலே' படத்தை இயக்கி வெற்றியை ருசித்த கையோடு மீண்டும் மலையாள திரையுலகிற்கே திரும்பிவிட்டார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. அடுத்ததாக அவர் பிருத்விராஜ் அல்லது மோகன்லால் படத்தை இயக்கப்போவதாகத்தான் இதுநாள் வரை செய்திகள் வெளியாகி வந்தன. அவரும் இந்த இருவருக்குமான கதைகளை தயாராக வைத்திருந்தாலும், அவர் தமிழுக்கு வந்துசென்ற அந்த இடைப்பட்ட காலத்தில் வேறு சில இயக்குனர்களின் படங்களில் இந்த இரண்டு நடிகர்களும் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகின்றனர். அதனால் இந்த இருவரையும் இயக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு புதிய கதையை கையில் எடுத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்...
ரோஷனின் ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இரட்டையர்தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்கள். படத்திற்கு 'ஸ்கூல் பஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக, அவரது முந்தைய படமான ''ஹவ் ஓல்டு ஆர் யூ' ஹீரோ குஞ்சாக்கோ போபனே நடிக்கிறார். இதில் அவருக்கு ஸ்கூல் பஸ் ட்ரைவர் வேடமாம்.. தனியார் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவும் இன்றைய கல்விமுறையின் அவலத்தை தோலுரிப்பதாகவும் கமர்ஷியல் பாணியில் இந்தப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் ஹிட்டாச்சு என்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் இதை தமிழுக்கும் கொண்டுவருவார் என நம்புவோம்.