பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டெம்பர், ரேஸ் குர்ராம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு திரைக்கதை எழுதிய வக்கந்தம் வம்சி நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு என ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து அவரிடம் கூறினார். அக்கதையைக் கேட்டு பிடித்துப் போக ஜுனியர் என்.டி.ஆரும் தனது சகோதரர் கல்யாண் ராம் தயார்ப்பில் அப்படத்தில் நடிப்பதாக வம்சியிடம் கூறியுள்ளார். ஆனால் இது வரை படப்பிடிப்பை துவங்குவது குறித்து வம்சியிடம் ஜுனியர் என்.டி.ஆர் எதுவும் கூறவில்லையாம்.
நானாகு பிரேமதோ படத்திற்கு பின்னர் தனது படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பார் என வம்சி எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரச் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ள படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக கடந்த மூன்று வருடமாக வம்சி படத்தில் நடிக்காமல் ஜுனியர் என்.டி.ஆர் காலம் கடத்தி வருகின்றாராம்.