'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் உண்மை காதல்கதையை வைத்து வெளியாகி ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில், எப்படி பிருத்விராஜ் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என காஞ்சனமாலா சொன்னாரோ, அதேபோல காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி தான் சரியான நபராக இருப்பார் என முடிவுசெய்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் வேறெந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவரையே நடிக்கவைத்தார். அவரும் படத்தில் காஞ்சனமாலாகவே வாழ்ந்திருந்தார். இப்போது மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்ட த்ரிஷ்யம்' புகழ் டெரர் நாயகி ஆஷா சரத், தானும் ஒருகாலத்தில் காஞ்சனமாலாவாக நடித்த கதையை ஒரு பேட்டியின்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது 21 வருடங்களுக்கு முன்பு அவர் கல்லூரியில் படித்துவந்த காலகட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாராம். அந்தசமயத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் கதை கல்லூரி மாணவர்களிடையே ரொம்பவும் பேமஸாம்.. அப்போது காஞ்சனமாலா - மொய்தீன் காதல்கதை பற்றி அப்போது ஒரு டெலிபிலிம் எடுக்கப்பட்டபோது அதில் காஞ்சனமாலாவாக நடித்தவர் ஆஷா சரத் தானாம். தான் பல வருடங்களுக்கு முன் நடித்த ஒரு கதாபாத்திரம் இப்போது சென்சேஷனல் செய்தியானது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆஷா சரத்.