அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நேற்று காலையில் தான் அந்த சந்தோஷமான செய்தி வெளியாகி மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. அதாவது சமீபத்தில் வெளியான பிருத்விராஜ் நடித்துள்ள 'என்னு நிண்டே மொய்தீன்' மற்றும் மம்முட்டியின் 'பாதமாறி' ஆகிய இரண்டு படங்களும் இந்த வருடம் நடைபெறவுள்ள கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தான் அந்த செய்தி... ஆனால் அந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே 'என்னு நிண்டே மொய்தீன்' பட இயக்குனரான ஆர்.எஸ்.விமல் தனது படத்தை திரைப்படவிழாவில் திரையிட வேண்டாம் என்றும் தான் படத்தை வாபஸ் வாங்கிக்கொள்வதாகவும் திரைப்பட அகாடமிக்கு தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் வருடந்தோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா ரொம்பவே முக்கியமான விழா ஆகும். இதில் ஒரு படம் திரையிட தேர்ந்தேடுப்படுவது என்பது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாச்சே.. அதை ஏன் இயக்குனர் விமல் வேண்டாம் என தூக்கி எறிகிறார் என பார்த்தால், ஒரு படைப்பாளியாக அவரது கோபம் வெளிப்பட்டுள்ளது.. இந்த திரைப்பட விழாவில் 'மலையாள பிலிம் டுடே' என்கிற பிரிவிலும் மற்றும் போட்டிப்பிரிவிலும் தான் மலையாள படங்கள் திரையிடப்படும்.. ஆர்.எஸ்.விமல் தனது படத்தை திரையிட அனுப்பியது போட்டிப்பிரிவில்..
ஆனால் திரைப்பட அகாடமி அவரது படத்தை 'மலையாள பிலிம் டுடே' பிரிவில் திரையிட தேர்ந்தெடுத்திருப்பதாக நாளிதழில் செய்தியை வெளியிட்டிருந்தது. இதைப்பார்த்த விமலுக்கு, தனது படம் திரையிடப்படும் பிரிவு தன்னை கேட்காமலேயே மாற்றப்பட்டுள்ளதையும், அது தனக்கு முறையாக அறிவிக்கப்படாமல் செய்தித்தாளின் வாயிலாக தெரிந்துகொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தியதையும் பார்த்து கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். தனது படம் போட்டிப்பிரிவில் கலந்துகொள்வதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்தும் அதிலிருந்து மாற்றப்பட்டதால், என் படத்தை திரையிட வேண்டாம்.. திருப்பிக்கொடுங்கள் நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்” என கமிட்டிக்கு லெட்டர் எழுதியுள்ளார்.