ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிராம மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வி.எம்.வினு இயக்கத்தில் 2013ல் வெளியான 'பாலேட்டன்' படத்தில், மோகன்லாலின் கேரக்டரே ஊருக்குள் யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடனே கிளம்பிவிடுவதுதான். அதுமட்டுமல்ல அவர்களுக்காக கைக்காசையும் செலவு செய்து போதாததற்கு கடன் வாங்கியும் உதவி செய்து வீட்டில் அம்மா, மனைவியிடம் வாங்கி கட்டிக்கொள்வார். ஆனால் இதுவரை அவர் கிராமத்தில் உள்ள பதவிகளை கேரக்டர்களாக ஏற்று நடித்ததாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
ஆனால் தற்போது இயக்குனர் ஜிபு ஜேக்கப் மோகன்லாலை வைத்து தான் இயக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு பஞ்சாயத்து செகரட்டரி கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்க்கவுள்ளார். இதற்குமுன் ஜிபு ஜேக்கப், தனது முந்தைய படமான 'வெள்ளிமூங்கா'விலும் கதாநாயகன் பிஜுமேனனுக்கு உள்ளூர் அரசியல்வாதி வேடம் தான் தந்திருந்தார். இந்த புதிய படத்தில் பஞ்சாயத்து செகரட்டரியான மோகன்லாலுக்கும் கிராமத்து மக்களுக்கும் ஏற்படும் சுவையான, கசப்பான, சிக்கலான அனுபவங்களின் கலவையாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ள கதாசிரியர் சிந்துராஜ். வி.ஜெ.தாமஸ் என்பவர் எழுதிய 'பிரணயோபனிஷத்' என்கிற சிறுகதையை தழுவி இதன் கதை உருவாக்கப்படுகிரதாம். வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.