பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை அனுஷ்கா, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்த ருத்ரமாதேவி திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அனுஷ்காவை மையப்படுத்தி உருவாக்குப்பட்ட இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கோண கண்ணா ரெட்டி கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜுன் பேசும் வசனங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியை தனது மனைவி சினேகா ரெட்டிக்கு அல்லு அர்ஜுன் சமர்ப்பணம் செய்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மகளான சினேகா அல்லு அர்ஜுனுக்கு இப்படத்தின் வசனங்களை பேச உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான் நடிப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் நடிகர் சிரஞ்சீவி என்றும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.