பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நடிகை அனுஷ்கா, அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்த ருத்ரமாதேவி திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. அனுஷ்காவை மையப்படுத்தி உருவாக்குப்பட்ட இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கோண கண்ணா ரெட்டி கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜுன் பேசும் வசனங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியை தனது மனைவி சினேகா ரெட்டிக்கு அல்லு அர்ஜுன் சமர்ப்பணம் செய்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மகளான சினேகா அல்லு அர்ஜுனுக்கு இப்படத்தின் வசனங்களை பேச உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான் நடிப்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் நடிகர் சிரஞ்சீவி என்றும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.