இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
எத்தனை முறை, எப்படி சொன்னாலும் உண்மை இதுதான்... மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசிலுக்கு தேவை ஒரு ஹிட். இன்னும் அழுத்தமாக சொன்னால் ஒரு மெகா ஹிட் கொடுத்தால் தான் தொடர்ந்து அவர் பீல்டில் நிலைத்து நிற்க முடியும்.. தற்போது அவர் கைவசம் இருப்பது இரண்டே இரண்டு படங்கள் தான். ஒன்று திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிக்கும் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. இன்னொன்று ஆக்சன் படங்களின் பிதமாகன் ஜோஷி இயக்கும் 'சிங்கிள்'.. ஜோஷியின் படம் என்பது ஜாக்பாட் அடிப்பது போலத்தான்.. வாய்த்தால் லக்.. இல்லையென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.. ஏனென்றால் ஜோஷியின் கடந்த மூன்று படங்களும் பிளாப் இல்லையென்றாலும் கூட ஆவரேஜ் லிஸ்டில் தான் இடம்பிடித்தன.
இந்த நேரத்தில் பஹத் பாசிலை வைத்து படம் இயக்க முன்வந்தார் சித்திக். அதுதான் பாஹத் பாசிலுக்கு சற்று தெம்பை தந்தது.. மம்முட்டியை வைத்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை முடித்துவிட்டு அப்படியே பஹத் பாசில் படத்தை இயக்குவதாகத்தான் முடிவு செய்திருந்தாராம் சித்திக். ஆனால் பாஸ்கர் தி ராஸ்கல்' பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாக அதை இந்தியில் ரீமேக் செய்யச்சொல்லி அழைப்பு வந்துள்ளது சித்திக்கிற்கு.. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய 'லேடீஸ் அன்ட் ஜெண்டிமென்' படமும் ஹிட் என்பதால் அதை இந்தியில் ரீமேக் பண்ண இருப்பதாகவும் தகவல். இதனால் தனது படத்தை சித்திக் கிடப்பில் போட்டுவிடுவாரோ என்கிற சஞ்சலம் பஹத் பாசிலின் மனதில் ஏற்பட்டுள்ளதாம்.