இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஓயாத அலைகள் நாயகன் நடிப்பில் வெளிவந்த அமரமான படத்தின் இரண்டாம் பாகத்தை சொந்த தயாரிப்பில் எடுக்க ஆசைப்பட்டார் அதன் இயக்குனர். அறிமுக விழாவெல்லாம் பிரமாண்டமாக நடந்திச்சு. படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு ஷூட்டிங் கூப்பிட்டிருக்கிறார் இயக்குனர். "ஹீரோயினா யாரை பிக்ஸ் பண்ணியிருக்கீங்க?"ன்னு கேட்டிருக்கார் நடிகர். இரண்டாவது வரிசை ஹீரோயின் ஒருத்தரை சொல்லியிருக்கிறார் இயக்குனர் "ஹேய்... என்ன இது... நான் யூத்தாக்கும் டாப்புல இருக்கிற ஹீரோயினை பிடி மேன்"னு சொல்லிட்டு போனை வைத்துவிட்டாராம். அன்று முதல் நடிகருக்கு எப்போ போன் போட்டாலும் அவர் போன் நாட் ரீச்சபிள்னு மட்டும்தான் பதில் சொல்லுதாம். எத்தனை வருஷம் ஆனாலும் அலை திருந்தாது. அது அடிச்சிக்கிட்டேதான் இருக்கும்னு உணர்ந்த இயக்குனர் படத்தை தூக்கி பரண்மேல போட்டுவிட்டு வச்சிட்டு வேற வேலை பார்க்க கிளம்பிட்டாராம்.