ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு தேசத்துக்காரர் பிரமாண்ட இயக்குனர் பட்டத்தை தட்டிச் சென்று விட்டதால். தமிழ்நாட்டு பிரமாண்டம் கொஞ்சம் அப்செட்டாம். இழந்த பட்டத்தை மீண்டும் பெற்றே தீருவது என களத்தில் இறங்கியிருக்காராம். இதற்காக மிஷின்மனிதன் படத்தை இரண்டாவதாக எடுத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கப்போகிறார். கதை ரெடி, உச்ச நடிகரும் ரெடி, 300 கோடி பணம் போட தயாரிப்பாளரும் ரெடி. பவர்புல் வில்லன்தான் கிடைக்கலையாம். கான் நடிகர்களிலிருந்து வோர்ல்ட் நாயகன் வரை கேட்டதில் எல்லோரும் நோ சொல்லிட்டாங்களாம். சீயான் நடிகர் ஓகே சொன்னாலும் தயாரிப்பு தரப்புக்கு பிடிக்கலையாம். ஒண்ணு கான் நடிகர் இல்லேன்னா வோர்ல்ட் ஹீரோவை பிக்ஸ் பண்ணிட்டு வாங்க பேசலாமுன்னு சொல்லிட்டாங்களாம். இதனால் பிரமாண்டமோ ஆழ்வார்பேட்டையே கதியென்று கிடக்கிறாராம்.