நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
மைனாவை தந்தவர் தற்போது சுள்ளானை வைத்து இயக்கும் படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்கத்தான் திட்டமிட்டார். அதற்காக வடஇந்தியாவில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துவதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், சுள்ளானின் லேட்டஸ்ட் படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி, அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்தை தடுமாற வைத்து விட்டதாம். அதனால் நடிகரின் வியாபாரத்தை மீறி நாம் படமெடுத்தால் மாட்டிக்கொள்வோம் என்று டைரக்டரின் கையை கட்டிப்போடுகிறதாம். விளைவு, வடஇந்தியா செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு லோக்கலிலேயே வட இந்தியாவை காட்டி விட முடிவு செய்திருக்கும் இயக்குனர், வடஇந்தியாவில் உள்ள ரயில்கள் செல்வதை தூரத்தில் நின்று படம்பிடித்து அதை ஆங்காங்கே காண்பித்து விட மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறாராம்.