டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல கலாம் நேற்று முன் தினம் இரவு மறைந்தார். அதன் பின் பல திரைப்பட நடிகர்களும் வழக்கம் போல டிவிட்டரில் 140 வார்த்தைகளுக்கு மிகாமல் தங்கள் பங்குக்கு 'RIP' என கூட நான்கு வார்த்தைகளைச் சேர்த்து எழுதிவிட்டு அவர்களது அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். குறைந்த பட்சம் விழாக்களில் கலந்து கொள்வதையோ, பார்ட்டி கொண்டாடுவதையோ தவிர்க்கவும் இல்லை. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இளமை துள்ளும் படத்தின் அறிமுக நாயகன் யார் இறந்தால் எனக்கென்ன என்ற விதத்தில் நேற்று முன்தின இரவில் பார்ட்டி வைத்து கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். அதில் அவருடைய மனைவி, திரையுலகினர் சிலர், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை அந்த பார்ட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் பரவ விட்டிருக்கிறார்கள். நாடே நேற்று முன் தின இரவு முதல் சோகத்தில் ஆழ்ந்திருக்க குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெற்ற நடிகர் தன் பிறந்த நாளை பார்ட்டி வைத்து கொண்டாடியதைத் தவிர்த்திருக்கலாமே. இப்படித்தான் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. மறைந்த போதும் ஒரு இசையமைப்பாளர் விழா ஒன்றில் கலந்து கொண்டும், மற்றொரு இசையமைப்பாளர் தன் டிரைலர் பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டது என்று செய்தி போட்டதும் நினைவிருக்கலாம்.