அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பெற்ற மகனை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்திய நினைத்தாலே இனிக்ககூடிய அந்த மாஜி ஹீரோயின் படத்தை முடிக்க பட்ட அவஸ்தை ரொம்ப அதிகமாம். ரெண்டு சீன்ல நடிச்சு கொடுங்கன்னு தன்னுடன் நடித்த பெரிய நடிகர்கள் இரண்டு பேரையும் கெஞ்சாத குறையாக கேட்டாராம். இருவருமே கைவிரித்து விட்டார்களாம். சரி படத்தை விற்றுக் கொடுங்கன்னு கேட்டாராம். வியாபார விஷயத்துல தலையிட மாட்டோம்னு சொலிட்டாங்களாம். கடைசியில கடன் வாங்கித்தான் படத்தை முடிக்க முடிஞ்சுதாம். கடனுக்கு சாட்சி கையெழுத்து போடக்கூட யாரும் முன்வரவில்லையாம். அவ்வளவு ஏன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர்றேன்னு ஒப்புதல் கொடுத்த பலர் கடைசி நேரத்துல வரலையாம். "தமிழ்நாடுதான் எனக்கு பிடிச்ச இடம்"னு மேடையில பேசினாலும் ஏன்தான் தமிழ்ல அறிமுகப்படுத்தினோமோ என்று உள்ளுக்குள்ளேயே புழுங்கி கிடக்காராம் நடிகை. இப்பல்லாம் தமிழ் சினிமாவை நினைத்தாலே அவருக்கு கசக்குதாம்.